search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
    X

    திற்பரப்பு அருவியில் இன்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதை படத்தில் காணலாம்.

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    • பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது‌. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணை யிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது.

    இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை யடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. விடு முறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.

    ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.23 அடியாக இருந்தது. அணைக்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 316 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. அணைக்கு 356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார்-1 அணை நீர் மட்டம் 14.89 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.99 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும் உயர்ந்துள்ளது.

    Next Story
    ×