search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு  அருவியில்  குளிக்க தடை நீடிப்பு
    X

    நாகர்கோவில் நகரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ளது.

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    • மழையால் ஆறுகளில் வெள்ளம்
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமு மாகவே காட்சியளித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழையின் வேகம் அதிக மாக இருந்தது. இரணி யல், பாலமோர், கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன் கோடு, முள்ளங்கினா விளை, ஆணைக்கிடங்கு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தது.

    இரணியலில் 76 மில்லி மீட்டரும், பாலமோரில் 22.4 மில்லி மீட்டரும் பேச்சிப்பாறை, சிவலோ கம் பகுதிகளில் 19 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்து வரும் மழை யின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்துவிடப்பட்டு உள்ள தால் திற்பரப்பு அருவி யில் தண்ணீர் அர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்திருந்த னர். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி பார்த்து சென்றனர். திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு தட்டி போர்டு வைத்து இருக்கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார்-1-18.8, சிற்றார்- 2-19.6, பூதப்பாண்டி-3.2, களியல்-24.2, கன்னிமார்- 3.6, குழித்துறை-18.2, நாகர்கோவில்-1, சுரு ளோடு-12.4, தக்கலை-2, இரணியல்-76, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-16.4, திற்பரப்பு- 24.8.

    கோழிப்போர்விளை- 7.8, அடையாமடை-19.2, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை- 10.2, ஆணைக்கிடங்கு-15, முக்கடல்-2

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.31 அடியாக உள்ளது. அணைக்கு 921 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.04 அடியாக உள்ளது. அணைக்கு 930 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.07 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.17 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 40.60 அடியா கவும், முக்கடல் நீர்மட்டம் 13.60 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×