search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலூர்-மூசாரி இணைப்பு சாலை சீரமைப்பு பணி - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    பாலூர்-மூசாரி இணைப்பு சாலை சீரமைப்பு பணி - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

    • 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி- பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்ட சாலை. இந்த சாலை கருங்கல்- – மார்த்தாண்டம், கருங்கல் –- புதுக்கடை ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும் பாலூர் கிராம ஊராட்சி யையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்டகாலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் கணப்பட்டது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வ தற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மூசாரி – பாலூர் செல்லும் சாலையை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் துறையின் மூலமாக தேர்வு செய்து அரசாணை பிறப்பித்து தரம் உயர்த்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி ரூ.30 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இப்பணிக்கான மதிப்பீடு தயாரிக்கும் போது பொது மக்களால் சாலையின் மொத்த அகலத்திற்கும் ஓடுதளம் அமைக்க கோரப்பட்டதை தொடர்ந்து 3.75 மீட்டர் தார் தளமும் அதன் இரு புறங்களிலும் பாவு தளமும் அமைத்திட ரூ.80 லட்சம் வரை தேவைப்பட்டதால் இப்பணிக்கான கூடுதல் தொகை ரூ.50 லட்சம், கூடுதலாக ரூ.80 லட்சத்திற்கு திருத்திய நிர்வாக அனுமதிக்கான கருத்துரு தலைமை பொறியாளர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் சமர்பிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சேர்த்து சாலை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பிறைட், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் லெனின் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×