search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலூர்-மூசாரி இணைப்பு சாலை சீரமைப்பு பணி
    X

    பாலூர்-மூசாரி இணைப்பு சாலை சீரமைப்பு பணி

    • அமைச்சர் மனோ தங்கராஜ்- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி-–பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலை கருங்கல்-– மார்த்தாண்டம், கருங்கல்-–புதுக்கடை ஆகிய 2 நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும், பாலூர் கிராம ஊராட்சியையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    இந்த சாலை 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்ட காலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த மழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலை இருந்தது. இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் மூலமாக உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைப்பு செய்யப் பட்டதா கும். நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×