search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் டாஸ்மாக் பாரில் தகராறு - போலீஸ்காரர் மீது தாக்குதல்
    X

    நாகர்கோவிலில் டாஸ்மாக் பாரில் தகராறு - போலீஸ்காரர் மீது தாக்குதல்

    • ஒருவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்து வந்தனர்.
    • பிடிபட்ட வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் குடிபோதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். டாஸ்மாக் பாரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிருடன் அந்த வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். உடனே ஒருவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்து வந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர், போலீசார் மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதை தடுத்தார். பின்னர் அந்த வாலிபர் போலீசாரை திடீரென தாக்கினார். இதில் போலீஸ்காரர் நிலை தடுமாறினார். பின்னர் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பிடிபட்ட வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசை தாக்கி விட்டு தப்பி சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்து அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    குடிபோதை தகராறில் போலீசாரை தாக்கிய சம்பவம் கோட்டார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×