search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட 4 தாலுகாக்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
    X

    குமரி மாவட்ட 4 தாலுகாக்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

    • மழை சேதங்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
    • முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருவாய் துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், பொதுப் பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோதி நிர்மலா பேசியதாவது-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் மழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்.

    தற்பொழுது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது‌. இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பந்த ப்பட்ட மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பியுள்ளார்களா? என்பது குறித்த தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இரவு பகலாக அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் கண்கா ணிப்பு அதிகா ரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×