search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் போலீசாரின் அதிரடி சோதனையில் மேலும் ஒரு கஞ்சா வியாபாரி கைது
    X

    நாகர்கோவிலில் போலீசாரின் அதிரடி சோதனையில் மேலும் ஒரு கஞ்சா வியாபாரி கைது

    • ஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி
    • கைது செய்த போலீ சார், 1 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் நடமாடுவதாக போலீசா ருக்கு புகார்கள் வந்தன.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் தீவிரம் காட்டினர். இதில் பல இடங்களில் கஞ்சா விற்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் ஏராளமாக பறி முதல் செய்யப்பட்டன.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறைந்தாலும் அதன் வரத்து இருந்து கொண்டே இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்டத்திற்குள் கஞ்சா எப்படி வருகிறது? என கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அப்போது வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாகவும், சுரியர் பார்சல் மூலமாகவும் கஞ்சா கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெயில் நிலை யம் மற்றும் கூரியர் அலுவல கங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மட்டுமின்றி பெரிய வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வடசேரி போலீசார், நேற்று பார்வதி புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பாலத்தின் அடியில் சந்தேக த்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரித்தனர்.

    அப்போது அவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீ சார், 1 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் ராமகிருஷ்ணன் (வயது22) என்பதும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால் குறிச்சியைச் சேர்ந்த அவர், தற்போது நாகர்கோவில் பார்வதிபுரம் இலந்தையடியில் வசிப்ப தும் தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் அவர் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் என்பதும் போலீஸ் விசார ணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×