நாகர்கோவில் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
நாகர்கோவில் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Published on

நாகர்கோவில் :

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ராஜாவை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்த கோட்டார் பகுதியில் அப்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தேர்தல் விதிமுறை அமலில் இருந்த நிலையில் நிர்வாகிகள் திரண்டதால் எஸ்.ஏ.அசோகன் உட்பட 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.ஏ.அசோகன் மற்றும் கிருஷ்ணதாஸ், ஆர்.ஜே.கே. திலக், ஜெயசீலன், டாரதி சாம்சன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com