search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் போலீசார் போட்ட பூட்டை உடைத்து மோட்டர் சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் சிக்கினார்
    X

    நாகரில் போலீசார் போட்ட பூட்டை உடைத்து மோட்டர் சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் சிக்கினார்

    • 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது

    நாகர்கோவில்,ஜூன்.7-

    நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.

    இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் தினமும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஹெல்மெட் அணியாமல் வருப வர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வசாமி தலைமை யிலான போலீசார் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை யில் வாகன சோத னையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

    போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணும் இல்லாதது தெரிய வந்தது. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் அந்த வாலி பருக்கு அபராதம் விதித்த னர். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் வீல் பூட்டு போட்டுவிட்டு சென்றனர்.

    பின்னர் வந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிளில் போடப்பட்டு இருந்த பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்ல சாமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அம் மாண்டி விளையைச் சேர்ந்த விஷ்வா (வயது 23) மீது வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அவர் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 427, 379 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விஷ்வாவை பிடித்துள்ளனர். பிடிபட்ட விஷ்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×