search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெங்கம்புதூர் அருகே நண்பர் வீட்டிற்கு சென்ற வாலிபர் மாயம்
    X

    தெங்கம்புதூர் அருகே நண்பர் வீட்டிற்கு சென்ற வாலிபர் மாயம்

    • கடந்த 2 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊருக்கு திரும்பினார்.
    • வழக்கு பதிவு செய்து மாயமான அபியை தேடி வருகின்றனர்.

    என். ஜி. ஓ. காலனி :

    தெங்கம்தூர் அருகே உள்ள பணிக்கன் குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தில் குமார் என்ற செல்வகுமார். இவரது மூத்த மகன் பிரமிஷ் குமார் என்ற அபி (வயது 29), கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 2 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊருக்கு திரும்பினார். கடந்த 7-ந் தேதி மாலை பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்த நண்பர் சிவாவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளார்.

    8-ம் தேதி காலையில் நாகர்கோவில் வரும்போது அபி, மற்றொரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன். நீ ஊருக்கு செல் என்று சிவாவிடம் கூறி சென்றுள்ளார்.

    அதன்பிறகு அபி வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் அபியின் தந்தை செந்தில்குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சுப்பையா சப்-இன்ஸ்பெக்டர் கருணா கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான அபியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×