சிற்றாறு வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியின் நடமாட்டத்தை கண்டறிய மோப்ப நாய் வரவழைப்பு

வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வுமோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 2 நாட்களாக அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்
சிற்றாறு வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியின் நடமாட்டத்தை கண்டறிய மோப்ப நாய் வரவழைப்பு
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் சிற்றாறு வன பகுதியில் சிலோன் காலனி அருகே புலி நடமாடுவதாக கூறப்பட்ட நிலையில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த ஆடு காணாமல் போனதும், ஆட்டின் உடல் பாகங்கள் புதர் பகுதியில் கண்டுபிடி க்கப்பட்டதும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது மல்லமுத்தன்கரை பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடித் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்ட த்தை கண்டறியும் வகையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்களில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் மாட்டப்பட்டு தீவரமாக கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளியின் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டுயிருந்த பசு மாட்டை புலி மீண்டும் இரவில் வந்து கடித்து குதறியது.

அதன் அலறல் சத்தம் கேட்டு தொழிலாளி வந்து பார்த்ததும் புலி ஆவேசமாக இருந்தது. பசு மாட்டை காப்பாற்ற சென்ற தொழிலாளியின் மகனின் கையில் புலியின் கை விரல்பட்டு காயங்கள் ஏற்பட்டன. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நாகர்கோவில் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 2 நாட்களாக அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதி பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். புலியின் நடமாட்டத்தை மாட்டப்பட்டுயிருக்கும் காமிராவில் பதிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

புலி நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் ரப்பர் பால்வடிப்புக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மாலையில், வழுக்கம் பாறை சந்திப்பி லிருந்து நடந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.

எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து அதனை காட்டுப்பகுதிக்குள் துரத்த வனத்துறையினர் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com