தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவன் சாவு

பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண்கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவன் சாவு
Published on

தக்கலை, அக்.7-

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண் (வயது 15). இவன் கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த தருண், நண்பர் மேத்யூ ஜோஸ் என்பவருடன் தக்க லை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும் பிய போது, சித்திரங்கோடு அருகே ரோட்டில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தருணுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தருண் பரிதாப மாக இறந்தார்.

இது சம்பந்தமாக தருணின் தந்தை, கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக் கிளை ஓட்டிய மேத்யூ ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். தருண் உடல் பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. விடுமு றைக்கு வந்த நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com