search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
    X

    கோட்டாரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

    • கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதையடுத்து ஹரிஹரசுதன் ஊருக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்கிளின் இருக்கைகள் முழுமையாக தீயில் இருந்து நாசமாய் இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரி ஹரசுதன் (வயது 35).

    இவர் திருவனந்தபுரத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹரிஹரசுதன் விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். தற்பொழுது அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதையடுத்து ஹரிஹரசுதன் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று ஹரிஹரசுதன் வெளியே சென்று விட்டு இரவு 10 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தினார். வீட்டில் சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு நள்ளிரவு தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மோட்டார் சைக்கிளின் இருக்கைகள் முழுமையாக தீயில் இருந்து நாசமாய் இருந்தது.

    மேலும் முன்பகுதியும் எரிந்து சேதம் அடைந்தி ருந்தது. மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. போலீசாரின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×