search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் திரளான பக்தர்கள் தரிசனம்

    • ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மமும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முத்திரி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்தி ருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மமும் நடந்தது.

    பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பிச்சி பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×