search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே பணம் மோசடி வழக்கில் கைதான பட்டதாரி பெண் சிறையில் அடைப்பு
    X

    தக்கலை அருகே பணம் மோசடி வழக்கில் கைதான பட்டதாரி பெண் சிறையில் அடைப்பு

    • தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32).
    • ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்

    நாகர்கோவில் : தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வ தாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஜி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீசார், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந் தனர். அவர்கள் செல்வ தற்கு முன்பாகவே, புகார் கொடுத்த வர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை போலீசார் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் முதலார் பகுதியை சேர்ந்த கிங்சிலி என்பவர் அஜி மீது போலீசில் புகார் செய்தார். தன்னிடம் ரூ.2லட்சத்து 43 ஆயிரம் வாங்கி ஏமாற்றி சென்ற அஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜியை கைது செய்தனர். மோசடி புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட் டில் அஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அஜி தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×