search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே மீன் வியாபாரி தற்கொலை
    X

    களியக்காவிளை அருகே மீன் வியாபாரி தற்கொலை

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே படந்தாலு மூடு பகுதியை சேர்ந்தவர் ஜீசஸ் கிறிஸ்டி (வயது 29). இவர் மீன் வியாபாரி. இவர் மனைவி குடும்பத்துடன் படந்தாலுமூடு பகுதியில் வசித்து வந்தார்.

    ஜீசஸ் கிறிஸ்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜீசஸ் கிறிஸ்டி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு மனைவியிடம் தகராறு செய்துவிட்டு தனது அறையில் சென்று கதவை மூடிவிட்டு படுத்து உள்ளார்.

    ஜீசஸ் கிறிஸ்டி எவ்வளவு போதையில் இருந்தாலும் இரவு உணவு சாப்பிடாமல் தூங்கமாட்டார். அவர் ஏன் இரவு உணவு சாப்பிட வரவில்லை என்று சந்தேகம் அடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்தபோது ஜீசஸ் கிறிஸ்டி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீசஸ் கிறிஸ்டியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×