search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • இன்று ஆடி 4-வது செவ்வாய்
    • சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்

    கன்னியாகுமரி :

    அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள். அப்போது பெண் பக்தர்கள் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி 4-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 4-வது செவ்வாயை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    ஆடி 4-வது செவ்வாயையொட்டி தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பகவதி அம்மன் கோவி லில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவ ரூபதரிசன மும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத்தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷபூஜையும், உஷ தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு அம்ம னுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், இரவு 7.30 மணிக்கு மலர் முழுக்கு விழாவும், 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி பல்லக் கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடக்கிறது.

    Next Story
    ×