search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்

    • சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மங்காடு பகுதியில் அதிகாரிகள் காரை மடக்கி பிடித்தனர்
    • 20 கேன்களில் சுமார் 700 லிட்டர் ரேசன் மண்ணண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று வட்டவழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு வருவாய் துறையினர் சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மங்காடு பகுதியில் அதிகாரிகள் காரை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது 20 கேன்களில் சுமார் 700 லிட்டர் ரேசன் மண்ணண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேசன் மண்எண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை மார்த்தாண் டம் அரசு விற்பனை நிலை யத்திலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×