search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நித்திரவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்திய 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    நித்திரவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்திய 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • தமிழக- கேரள எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் தீவிர கண்காணிப்பு
    • மீனவ கிராமங்களில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்பனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு சிலர் ரேசன் அரிசியை கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க தமிழக- கேரள எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.மேலும் தனிப்படைகள் அமைத்தும் இரவு பகலாக சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலைநித்திரவிளை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீஸ்காரர் சவுந்தர் ஆகியோர் கோனசேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக சென்றது.

    போலீசார்சந்தேகம் அடைந்து வாகனத்தை திரும்பி பார்த்த போது அந்த வாகனத்தின் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றுள்ளது.இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினர்.

    தொடர்ந்து காருக்குள் சோதனை செய்த போது அதில் சிறு சிறு சாக்கு மூடைகளில் சுமார் 700 கிலோ ரேசன் அரிசி கறுப்பு துணி கொண்டு மூடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் காருடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அரிசி யை கடத்தியது கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த வினு என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து காருடன் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட வினுவை வட்டவழங்கல் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×