search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 7 கல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன - அதிகாரி தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் 7 கல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன - அதிகாரி தகவல்

    • 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன
    • குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், புவி யியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பால முருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப் பிட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் 7 கல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீத முள்ள 3 குவாரிகள் மலையிட வாழ் பகுதிகளில் முறையான கிளியரன்ஸ் மற்றும் மாநில சுற்றுப்புறசூழல் தாக்க மதிப் பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றும் இயங்கி வருகின்றன.

    இதில் சித்திரங்கோட்டில் உள்ள குவாரி உதவி இயக்கு நர், புவியியல் மற்றும் சுரங் கத்துறை செயல்முறைகள் குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.

    இக்குவாரியில் டிஜிபிஎஸ் சர்வே முடிக்கப்பட்டு நடைமு றையில் உள்ளது. இங்கு ஏதே னும் விதிமீறல் இருப்பின் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் கீழ் மேல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும் டிரோன் சர்வே செய்யப்பட்டு எடுக்கப்பட்ட கற்களின் அள வீடு குத்தகை காலத்தில் அனு மதிக்கப்பட்ட அளவிற்கும், எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவிற்கும் வேறுபாடு இருப் பின் கனிம உரிம தொகையும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் எடுக்கப்பட்டிருப்பின் சிறு கனிம சலுகை விதி 36 (4)-ன் கீழ் அபராத நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×