search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் 62.2 மில்லி மீட்டர் மழை
    X

    குளச்சலில் 62.2 மில்லி மீட்டர் மழை

    • திற்பரப்பில் தண்ணீர் கொட்டுகிறது
    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்வ தால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. குளச்சல் பகுதியில் நேற்று மாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய் தது. இரவும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்துவரும் மழை யின் காரணமாக அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    பேச்சிப்பாறை, மாம் பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி வழி கின்றன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையின் நீர்மட்ட மும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று மாலைக் குள் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அணை நீர்மட்டம் 42 அடி எட்டியதும் ஆற்றின் கரையோர பொதுமக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடு முறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வந்திருந்த னர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.81 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 15.45 அடியாக வும், சிற்றாறு -2 அணை நீர்மட்டம் 15.55 அடியா கவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.70 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×