search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழைக்கு மேலும் 6 வீடுகள் இடிந்தது
    X

    குமரியில் மழைக்கு மேலும் 6 வீடுகள் இடிந்தது

    • சிற்றார் 2-ல் 37.4 மில்லி மீட்டர் மழை பதிவு
    • மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வரு கிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்தது.

    பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணைப்ப குதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையோர பகு தியான பாலமோர் பகுதி யில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 37.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.06 அடி யாக இருந்தது. அணைக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 281 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 64.05 அடியாக உள்ளது. அணைக்கு 445 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.

    சிற்றார்-1 நீர்மட்டம் 14.79 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 14.89 அடியாகவும் உள்ளது. பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம் பழத்துறையாறு நீர்மட்டம் 36.42 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 16.20 அடியாக உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 53 வீடுகள் இடிந்து விழுந்து இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்து உள்ளது.

    ஏற்கனவே கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தாழக்குடி, தோவாளை பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்திருந்தது. அந்த மழை நீர் சற்று வடிந்திருந்த நிலை யில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×