search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.1 கோடியில் 4 உயர் கோபுரம் மின் விளக்குகள்
    X

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.1 கோடியில் 4 உயர் கோபுரம் மின் விளக்குகள்

    • ஒரு வார காலத்திற்குள் பணியை முடிக்க திட்டம்
    • ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த விளை யாட்டு அரங்கங்களில் அண்ணா விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விளையாட்டு அரங்கத்தை பராமரிக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 8 கேலரிகள் உள்ளன. மாவட்ட அள விலான கைப்பந்து போட்டி, கபடி போட்டி மற்றும் மின்னொளி விளை யாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ராணுவத்தில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்கள், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சி களை மேற்கொண்டு வருகி றார்கள். இந்த மைதானத்தில் உள்ள கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை பராமரிக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை யடுத்து இந்த மைதானத்தை சீரமைக்க ஏற்கனவே விளையாட்டு துறை சார்பில் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கேலரிகள் பராமரிக் கப்பட்டது.

    மேலும் இங்குள்ள அறைகள் உட்பட அனைத்தையும் பராமரிக்க ரூ.1கோடியே 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது. இரவு நேரங்களில் மாநில அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் போது தற்காலிகமாக மின் விளக்குகள் அமைக்கப் படும்.

    நிரந்தரமாக மின்விளக்கு அமைக்க முன்னாள் எம்.பி விஜயகுமார் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்க டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டரங்கத்தில் நான்கு புறங்களிலும் இந்த உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மின் விளக்குகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் ஏற்கனவே வெளியிடங்களில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஒரு வார காலத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்கும் பொழுது இரவை பகலாக்கும் வகை யில் மின் விளக்குகள் அமையும். மாநில அள விலான மாவட்ட அளவி லான போட்டிகள் நடத்தப்ப டும் போது இது பய னுள்ளதாக இருக்கும் என்று விளையாட்டு வீரர்கள் கருதுகிறார்கள்.

    மின்விளக்கு வசதி மட்டுமின்றி மற்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விளை யாட்டு அலுவலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்ணா விளை யாட்டு அரங்கத்தை ஒட்டி யுள்ள நீச்சல் குளம் கடந்த சில நாட்களாக போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. தற்பொழுது சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் நீச்சல்குளம் காட்சியளிக்கிறது. நீச்சல் குளத்திற்கு வரும் பாதையும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகி றார்கள்.

    நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் பராமரிப்பு பணிகள் ஒருபுறம் இருக்க சட்டமன்ற தொகுதி வாரியாக சிறு விளையாட்டு மைதானங்களை அமைப்ப தற்கு தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பத்மநாபபுரம் தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைக்கப்படும் போது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Next Story
    ×