படுக்கை அறை காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிய 3 பேர் கேரளாவிற்கு தப்பி ஓட்டம்

கைதான 4 பேர் ஜெயிலில் அடைப்பு10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.
படுக்கை அறை காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிய 3 பேர் கேரளாவிற்கு தப்பி ஓட்டம்
Published on

நாகர்கோவில் :

குமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் படுக்கையறை காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பெண்ணின் வீட்டில் செல்போனில் வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நிகேஷ் (20), பபின் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்த விவகாரம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த வாலிபரையும், பெண்ணையும் கண்டித்தனர். பலமுறை கண்டித்தும் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டனர். சம்பவத்தன்று வாலிபரும், இளம்பெண்ணும் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது வாலிபர்கள் வீட்டின் வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். படுக்கை அறையில் இருவரும் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

இந்த வீடியோவை வாலிபர்கள் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதில் சுமேஷ், நிகேஷ், பபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்பட போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com