மீன்வளத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள்

மத்திய மந்திரி புருஷோத்தம்ரூபாலா தகவல்பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பணிகள்
மீன்வளத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகி யோர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வ ரம் விவேகா னந்தா கல்லூரி யில் நடந்த மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா பேசியதாவது:-

நமது நாட்டில் முதன் முதலாக சாகர் பரிக்கிரமா திட்டத்தின் மூலம் குஜராத் முதல் கன்னியாகுமரி வரை யில் உள்ள கடலோர மீனவ கிராம மக்களை சந்தித்து வருகிறேன். பல இடங்களில் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு இங்கு வந்துள்ளேன். பொதுவாக இந்தியா என்று கூறினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். இப்படி பாரத தாயின் கால் பாதம் எனப்படும் கன்னியாகுமரி யில் நான் பேசுவதை பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக நீளத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

மீனவர்களின் வாழ்க்கை கடலை நம்பித்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைச்சரகத்தை பிரதமர் ஏற்படுத்தி உள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப் பட்டுள்ளது. அதில் 200 பேர் கடன் பெற்று பயன டைந்துள்ளனர். கடன் அட்டை மூலம் பெரும்பா லும் பெண்கள் பலன் பெற் றுள்ளனர். பிரதமர் மோடி மீனவ மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது ரூ.3ஆயிரத்து 680 கோடி தான். தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப்பணி களுக்கு மீன்வளத்துறையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மூலம் நான் தமிழக மக்களின் கருத்துக் களை கேட்ட பிறகு ஒரு விஷயம் தெரியவந்தது.

கடலில் 1000 கிலோ மீட்டர் தாண்டி சென்று மீன வர்கள் மீன் பிடித்துவருவது எனக்கு ஆச்சர்யமாக உள் ளது.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மீன்வ ளத்துறை அதிகாரிகள், மத்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com