search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மோசடி புகார் தொடர்பாக 2 பூசாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்
    X

    நாகர்கோவிலில் மோசடி புகார் தொடர்பாக 2 பூசாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
    • சுமார் ரூ.7 லட்சம் வரைக்கும் கொடுத்து நாககற்கள் வாங்கினேன்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியில் ஒரு வீட்டில் சாமி சிலைகள் வைத்து சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் பூஜை செய்வதோடு அருள் வாக்கும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 பேர் மீதும் மோசடி புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

    அதில்,அருள்வாக்கு கூறிய சாமியார்கள், தங்க ளுக்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும், தங்களிடம் உள்ள நாககற்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்தால், நினைத்த காரியம் நடக்கும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்றெல்லாம் கூறினர்.

    இதை நம்பி அவர்களிடம் சுமார் ரூ.7 லட்சம் வரைக்கும் கொடுத்து நாககற்கள் வாங்கினேன். அவற்றை பரிசோதித்த போது சாதாரண கற்கள் என்ப தும், விலை குறைவானவை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து என்னிடம் மோசடி செய்த சாமியார்கள் குறித்து விசாரித்த போது, அவரிடம் ஏராளமான பெண்கள் இது போன்று ஏமாந்து இருப்பது தெரியவந்தது. எனவே சாமியார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் சாமியார்கள் சுரேஷ்குமார் மற்றும் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை தேடி சுங்கான்கடை சென்றபோது, அவர்கள் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமனிடம் கேட்ட போது, புகார் சம்பந்த மாக இரணியல் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமார், அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். சம்மனுக்கு ஆஜராகி விளக்கமளிக்க தவறினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×