search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
    X

    நாகர்கோவிலில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு
    • நன்கு நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிதாக 35 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

    குறிப்பாக கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்களில் இணைந்து பணிபுரிய நன்கு நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி விண்ணப்பித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

    அப்போது விண்ணப்பித்தவர்களின் உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்ட இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு ஈஸ்வரன் உடன் இருந்தார்.

    Next Story
    ×