search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
    X

    கோப்பு படம் 

    மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

    • உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ், மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சாமின் (வயது 29). இவர்களுக்கு 7 மற்றும் 3½ வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ராஜேஸ் மணவாளக்குறிச்சியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் படுத்து தூங்கினார். கண் விழித்து பார்த்தபோது மனைவி சகாய சாமின் மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை. உடனே அவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராஜேஸ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×