search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை 4 வழிச் சாலை அருகே வலை கம்பெனி மேலாளரை தாக்கி நகை, பணம், ஏ.டி.எம். கார்டு பறிப்பு
    X

    கோப்பு படம் 

    தோவாளை 4 வழிச் சாலை அருகே வலை கம்பெனி மேலாளரை தாக்கி நகை, பணம், ஏ.டி.எம். கார்டு பறிப்பு

    • இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

    இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.

    அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×