search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே ரெயில்வே மேம்பாலம் பணிகளை விஜய் வசந்த் எம்.பி.ஆய்வு
    X

    ரெயில்வே மேம்பாலம் பணிகளை விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    இரணியல் அருகே ரெயில்வே மேம்பாலம் பணிகளை விஜய் வசந்த் எம்.பி.ஆய்வு

    • கால்வாயில் நீர் கசிவு உள்ளது
    • விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    இரணியல் ரெயில் நிலையம் அருகில் நெய்யூர் -பரம்பை பகுதியில் விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

    தொடர்ந்து தண்ட வாளத்தின் குறுக்கே தொட்டி போன்று கட்டி கால்வாய் பாலம் சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் விட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கால்வாயில் நீர் கசிவும் கால்வாய் தொட்டி போன்று இருப்பதால் தண்ணீர் வால் முனை கடை வரம்பு வரை செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா , பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    ஆய்வின் போது இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜான்சவுந்தர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், நெய்யூர் பேரூ ராட்சி தலைவர் பிரதீபா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாவட்ட விவசாய காங்கிரஸ் துணைத் தலைவர் ஜேக்கப் அருள் பால், குளச்சல் சட்ட மன்ற தொகுதி தலைவர் ஜேக்கப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×