search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள்
    X

    5-ம் திருவிழாவையொட்டி நடந்த பல்சுவை கலைநிகழ்ச்சியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியபோது எடுத்த படம்  

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில்உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத் தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் திருப்பலி மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடந்தது.

    குளச்சல் வட்டார முதல்வர் அருட் பணி யாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமையில் அன்னை நகர் பங்கு தந்தை அருட்பணியாளர் ரைமண்ட் மறையுரை ஆற்றினார். இதனை மறைக்கல்வி மன்றம் சிறார் இயக்கம் மற்றும் பள்ளிகளின் ஆசிரி யர்கள் சிறப்பித்தனர். இரவு 9 மணிக்கு பல் சுவைகலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச் சியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர்ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்கினார். பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொரு ளாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் திரளான பங்குமக்கள் மற்றும் பங்கு பேரவையின் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×