என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது
- சவேரியார் ஆலயத்தில் நடந்த சாம்பல் புதன் திருப்பலியில் பிஷப் நசரேன் சூசை பங்கேற்பு
- மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாகர்கோவில்:
கிறிஸ்தவர்களின் கடவு ளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் அறை யுண்டு மறைந்தார்.
இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து வறியவர்களுக்கு உதவி கள் செய்வது வழக்கம். இந்த நாளை அவர்கள் ஆண்டு தோறும் தவக்காலமாக கடைப்பிடித்து வருகி றார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும்.
இன்று கிறிஸ்தவ ஆலயங்க ளில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி ஏராளமானோர் பங்கேற்ற னர்.
கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நெற்றியில் சாம்பலால் சிலுவை குறியீடு செய்தார். கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் ராஜ், பொருளாளர் அலோசி யஸ் பென்சிகர், ஆயரின் செயலாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய செல்வன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
இதே போல் கன்னியா குமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதிரியார்கள் சாம்பல் மூலமாக நெற்றியில் சிலுவை குறியீடு செய்தனர். சாம்பல் புதன் நிகழ்ச்சியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்