search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் ஆய்வு இன்றுடன் நிறைவு
    X

    கிறிஸ்டோபர் காலனியில் உள்ள பூங்காவை மேயர் மகேஷ் ஆய்வு செய்த காட்சி.

    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் ஆய்வு இன்றுடன் நிறைவு

    • வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதாக மேயர் மகேஷ் பேட்டி
    • ஆய்வின்போது ஆணையாளர், மாநகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் நேரில் ஆய்வு செய்து என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்தார். கடந்த 2 மாத காலமாக இந்த ஆய்வு பணி நடந்தது. 51 வார்டுகளில் நேற்றுடன் ஆய்வு பணி நிறைவடைந்து இருந்தது. இன்று மேயர் மகேஷ் வார்டான 4-வது வார்டில் தெரு தெருவாக சென்று ஆய்வு மேற் கொண் டார்.

    அப்போது மக்களின் குறைகளை கேட்டு அறிந் தார். கிறிஸ்டோபர் காலனி, வெள்ளாளர் தெரு பகுதி களில் ஆய்வு மேற் கொண்ட மேயர் மகேஷ் அந்த பகுதி யில் உள்ள பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பெருவிளை அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரை சீர மைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் மகேஷ் அதை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிடித்து பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்டு வரு கிறது. பிளாஸ்டிக் முற்றிலு மாக ஒழிக்கப்பட்டு உள் ளது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளவேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கவுன்சி லருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து வார்டுகளிலும் நேரில் சென்று நான் ஆய்வு மேற்கொண்டேன். பல்வேறு பொதுமக்களை சந்தித்து பேசினேன்.

    அப்போது பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் குறித்து தகவல் தெரிவித்தனர். எந்தெந்த வார்டுகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்பொழுது நாகர் கோவில் மாநகராட்சி யில் சாலை சீரமைப்பிற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து அளிக் கப்பட்டு உள்ளது. விரை வில் அந்த பணிகள் தொடங்கப்படும். ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி யில் அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு பார பட்சமும் இன்றி ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    தற்போது 52 வார்டுகளி லும் கழிவு நீர் ஒடைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் ஒடைகளில் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப் பட்டு அதை சீரமைத்து உள்ளோம். அடுத்த கட்டமாக சாலை சீரமைப்பிற்கான நிதிகள் ஒதுக்கப்படும். 52 வார்டுகளுக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பது குறித்த பட்டியல் இன்னும் ஒரு இரு நாட் களுக்குள் இறுதி செய் யப்பட்டு முதல்-அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அரசிடம் இருந்து நிதி பெற்று அனைத்து பணிகளும் விரை வில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த்மோகன், மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×