search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்
    X

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்த லங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் ஊா்வலமும் மாலை 6-30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்கு தந்தை ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4-30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா்.

    காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடி யிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது..

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×