search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சியில் கணவன்-மனைவி தற்கொலை
    X

    தற்கொலை செய்த ஆறுமுக பெருமாள்-பிரேமலதா. (பழைய படம்)

    மணவாளக்குறிச்சியில் கணவன்-மனைவி தற்கொலை

    • கடன் சோகத்தில் விபரீத முடிவை தந்தை எடுத்து விட்டார்
    • மகன்கள் உருக்கம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன் பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (வயது 63). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி பிரேம லதா (58). இவர்களது மகன்கள் ஆதவன் (32), மாலன் (28) ஆகியோர் சென்னையில் ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில்ஆதவன் சென்னையிலிருந்து தந்தைக்கு போன் செய்து உள்ளார்.ஆனால் ஆறுமுக நயினார் போனை எடுக்க வில்லை. எனவே மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினருக்கு ஆதவன் தகவல் கூறியுள்ளார்.

    அவர்கள் விரைந்து சென்று பார்க்கும்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆறுமுகபெருமாள் சோபாவிலும், பிரேமலதா தரையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தி ருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடன் விவகாரத்தால் கணவன்-மனைவி இருவரும் பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகபெருமாளின் மகன் ஆதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரிய வந்தது.

    கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதனை அடைக்க தனது தந்தையிடம் அவர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறுமுக பெருமாள் குடும்ப சொத்தை விற்று பணம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் பத்திரப் பதிவு நடக்கவில்லை என கூறப்ப டுகிறது.

    சரியான நேரத்தில் மகனுக்கு உதவ முடிய வில்லை என ஆறுமுக பெருமாள் கடந்த சில நாட்களாக மன வேதனை யில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் தான் அவர் தற்கொலை முடிவை மனைவியுடன் சேர்ந்து எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    பெற்றோர் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவர்களது மகன்கள் சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடன் விவகாரத்திற்காக இப்படி விபரீத முடிவை எடுத்து விட்டீர்களே என தந்தை உடலை பார்த்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×