களியக்காவிளை அருகே குடிபோதையில் நண்பரை குத்தி கொன்ற வாலிபர்கள்

திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.
கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.
Published on

கன்னியாகுமரி:

களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).

இவரது நண்பர்கள் விபின், றிஜூ , ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ , ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றஜி யை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com