search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
    X

    கோப்பு படம் 

    திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    • உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மங்காட்டுவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டயாலிஸ் செய்துவந்தார் இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். இதை அவரது இளைய மகன் பார்த்து உடனே ஆற்றூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு 2 நாள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மூத்தமகன் ஷாஜி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகரை பெற்றுக்கொண்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    Next Story
    ×