search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காம்பவுண்ட் சுவர் உடைப்பு; 4 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம் 

    காம்பவுண்ட் சுவர் உடைப்பு; 4 பேர் மீது வழக்கு

    • மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு கண்ணன் விளையைச் சேர்ந்தவர் சஜித் ஜி தாஸ் (வயது 48). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஊரில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (54), ஆன்சில் பெனின் (19), அக்சில் பெனின் (21), ஷீபா (42) ஆகியோருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அடுத்த சஜித் ஜி தாசின் காம்பவுண்டு சுவரை சம்பந்தப்பட்ட நான்கு பேரும் சேர்ந்து சுத்தியல், கம்பி, கடப்பாரை ஆகியவற்றை வைத்து உடைத்த தாக கூறப்படுகிறது. இதனால் ரூ.75 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், தட்டி கேட்ட சஜித் ஜி தாசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×