search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம் 

    புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஆசைப்பட்ட மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காய்பட்டினம் அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஷெர்லின் (வயது 17).

    இவர், கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிளஸ்-2 படிக்கும்போது மருத்துவ படிப்புக்கு ஷெர்லின் ஆசைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மதிப் பெண் குறைவாக இருந்ததால் மருத்துவ படிப்பு கிடைக்க வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்ப தால் ஷெர்லின் வீட்டில் இருந்தார். மாலையில் அவரது தாயார் அந்த பகுதியில் நடந்த மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த போது மகளை காண வில்லை. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது ஷெர்லின் தூக்கில் பிணமாக தொங்கு வது தெரிய வந்தது. இதை பார்த்து அதி்ச்சி அடைந்த தாயார் கூச்சலிட்டார்.

    பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங் கிய ஷெர்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×