search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிள்ளையார்விளையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
    X

    கோப்பு படம் 

    பிள்ளையார்விளையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

    • பிள்ளையார் விளையில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.
    • கோவில் திருவிழாவையொட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரி சாலை மறியல் போராட்டம்

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளையார் விளை யில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதியில் வாகன பவனி நடக்கும்.விழாவைெயாட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

    இதனால் ஊர் மக்கள் ராஜாக்கமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. தொடர்ந்து அவர்கள் கணபதி புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    பின்னர் போலீசார் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்கள் அங்கி ருந்து செல்ல வில்லை. இதனை தொடர்ந்து பிள்ளையார் விளை ஊர் தலைவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 63), அய்யப்பன் (37), சசிகுமார் (45), அருள் முருகன் (46), ஜவகர் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×