search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு  தொடக்கம்
    X

    தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.


    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

    • கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உபகரணங்களை இயக்கி பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன், மருத்துவர்கள் சரவணக்குமார், மீனாட்சி, நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், கவுன்சிலர்கள் திவான் மைதீன், முகையதீன் கனி, தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன், பகவதியப்பன், நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது மற்றும் நிர்வாகிகள் கருப்பணன், முதலியான்கான், வேல்சாமி, பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, கிளை செயலாளர்கள் பாலாஜி, கணேசன், முத்துராஜ், தங்கம், சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் காளிமுத்து, அப்துல் மஜீத், அப்துல் வகாப், முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, மசூது, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×