search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
    X

    ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

    • பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட காரணமாக இருந்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வழக்கில் பதிவு செய்ய வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன பழங்குடி மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவா் டில்லி பாபு தெரிவித்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சட்ட விரோதமாக அழைத்து சென்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புளியாண்டபட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், பெண்கள் உள்ளிட்டோரை ஆந்திர மாநில போலீசார் சட்ட விரோதமாக விசாரணைக்காக அழைத்து சென்றனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு குறவர் பழங்குடி சங்கத்தின் மாநில பொருளாளர் வேலு என்பவரை நாங்கள் சித்தூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, வலுவான சட்டப் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து வேறு வழியின்றி ஆந்திர போலீசார் 5 பேரை அனுப்பி வைத்தனர்.

    திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபரை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்கள், சிறுவன் ஆகியோரை கைது செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். பெண்களை பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன பழங்குடி மக்களுக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும்.

    பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட காரணமாக இருந்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வழக்கில் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×