search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டைடல் பார்க் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் - கலெக்டர் பேட்டி
    X

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்

    டைடல் பார்க் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் - கலெக்டர் பேட்டி

    • திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.
    • டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார்.

    திருப்பூர் :

    தமிழக அரசு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், டைடல் பார்க்உருவாக்கி வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்காக அவிநாசி தாலுகா திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.

    டைடல் பார்க் வளாகம், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது.அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. டைடல் பார்க் துவங்கப்பட்டால், அது திருப்பூரின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் என்கின்றனர் தொழில்துறையினர்.

    கலெக்டர் வினீத் கூறுகையில், முதல்வர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் 1.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது. டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார். டைடல் பார்க் அமைவதன் மூலம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப்பெற முடியும் என்றார்.

    Next Story
    ×