search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    கோப்பு படம்

    நத்தம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகை பறித்துசென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே வேலாயுதம்பட்டி- காரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). இவரது மனைவி ரேணுகாதேவி (35). வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிசங்கி லியை பறித்து சென்றுள்ள னர்.

    இதுகுறித்து நத்தம் போலீசில் ரேணுகாதேவி புகார் அளித்தார். அதன்பே ரில் இச்சம்பவம் தொட ர்பாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×