என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு
- களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
- சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
ஹெல்மெட் அணிந்த நபர்
சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். டெய்சி மொபட்டை ஓட்டினார். எஸ்தர் பின்னால் அமர்ந்திருந்தார்.
களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் பிளவக்கல் இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் எஸ்தரின் கைப்பையை பிடித்து இழுத்தார். ஆனால் எஸ்தர் கைப்பையை கெட்டியாக பிடித்து கொண்டார்.
நகை பறிப்பு
இதனால் கைப்பையை பறிக்க முடியாத மர்ம நபர் எஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறிப்பதற்காக பிடித்து இழுத்தார். எஸ்தர் சுதாரித்துக் கொண்டு செயினை வலுவாக பிடித்து கொண்டார். இதில் செயின் ஒரு பகுதியும், கொக்கியும் மர்ம நபர் கையில் சிக்கியது. அதனுடன் அவர் தப்பி சென்று விட்டார்.
பறிக்கப்பட்ட செயினின் எடை 1 பவுன் ஆகும். இதுபற்றி எஸ்தர் களக்காடு போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்