search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திப்பு ரெயில் நிலைய சாலையை ஆக்கிரமித்துள்ள  இட்லி கடைகள்- வாகன நெருக்கடியால் பயணிகள் தவிப்பு
    X

    சாலையை ஆக்கிரமித்துள்ள இரவு நேர உணவகம்.

    சந்திப்பு ரெயில் நிலைய சாலையை ஆக்கிரமித்துள்ள இட்லி கடைகள்- வாகன நெருக்கடியால் பயணிகள் தவிப்பு

    • ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை, இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.
    • மீண்டும் தள்ளுவண்டி கடைகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் சேவையை கொண்ட ரெயில் நிலைய மாகும். இங்கு ரெயிலில் பயணிப்பதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் தங்களது உறவினர்களுடன் வந்து இறங்குவார்கள்.

    போக்குவரத்து நெருக்கடி

    இதனால் சந்திப்பு பஸ் நிலைய சாலை, அங்கிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்டவை எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டு வாகனங்கள் சீராக சென்று திரும்ப வழிவகை செய்வார்கள்.

    இட்லி கடைகள்

    கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இங்கு கடுமை யான போக்குவரத்து நெரு க்கடி இருந்ததால் பயணிகள் குறித்த நேரத்தில் ரெயிலை பிடிக்க முடியாத நிலை இருந்ததாக புகார்கள் எழுந்தது. இதற்கு காரணமாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், திடீரென முளைக்கும் இட்லி கடைகள் உள்ளி ட்டவை கூறப்பட்டன.

    இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சாலையை ஆக்கிரமித்து போடப் பட்டு இருந்த தள்ளு வண்டி கடைகள் முழுவது மாக அப்புறப்ப டுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் சீராக சென்று வந்தன. தற்போது மீண்டும் தள்ளு வண்டி கடைகள் போட முயற்சி நடைபெற்று வருகிறது.

    பயணிகள் புகார்

    மேலும் இரவு நேரங்களில் ரெயில்நிலைய சாலையின் 2 பகுதியிலும் இருக்கும் கடைகள் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் சிலர் சேர், அடுப்புகளை வைத்து இட்லி கடை போடுகின்றனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட தொடங்கி உள்ளதாகவும், இதனால் வாக னங்கள் செல்ல முடி யாமல் நெருக்கடி ஏற்பட்டு குறித்த நேரத்தில் ரெயி ல்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

    எனவே மாநகர போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து தற்காலிக உணவ கங்களை அப்புறப்படுத்தி இரவு நேர போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×