search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் நாளை காலை நடக்கிறது : நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்
    X

    சிதம்பரத்தில் நாளை காலை நடக்கிறது : நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்

    • சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் நாளை காலை நடைபெற இருக்கிறது.
    • மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    கடலூர்:

    பஞ்ச பூத தலங்களில் ஆகாயதலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடை பெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடை பெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திரும ஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடரா ஜமூர்த்தி, சிவ காம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திரு மஞ்சன திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வே று வாகனங்களில் பஞ்சமூ ர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிக ழ்ச்சியான ேதரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நடராஜர்,சிவகாமசுந்தரி, விநாயகர்,முருகர், சண்டி கேஸ்வரர்ஆகிய சாமிகள் தனித்தனிதேரில் வலம் வருவார்கள். சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடரா ஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்தி கள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.தேரோட்டத்தை யொட்டிகீழரதவீதியில் 5 தேர்கள் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×