search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சொந்த வீட்டிலேயே 27 பவுன் நகை கொள்ளையடித்த  ஐ.டி ஊழியர்
    X

    கோவையில் சொந்த வீட்டிலேயே 27 பவுன் நகை கொள்ளையடித்த ஐ.டி ஊழியர்

    • சம்பவத்தன்று சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார்.
    • இது குறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது50).

    இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகள் வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அவர் காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×