search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூழில் சர்வதேச மகளிர் தினவிழா
    X

    கம்பைநல்லூழில் சர்வதேச மகளிர் தினவிழா

    • உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
    • பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    கிருஷ்ணாபுரம்,

    சுருதி ரிசோர்ஸ் செனட்டர் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் சுருதி ரிசோர்ஸ் சென்டரின் இயக்குனர் மகாதேவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் மகாதேவய்யா கூறுகையில், பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    இதில் குறிப்பாக சுருதி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிராமங்கள் அவர்களுடைய வளர்ச்சிக்காக வங்கிகளின் பயன்பாடும், தொழில்களின் பயன்பாடும், பயிற்சிகளின் பயன்பாட்டையும் விளக்கி பேசினார்.

    இந்த விழாவிற்கு கிருஷ்ணாபுரம், கம்பை நல்லூர் மற்றும் ஒடசல்பட்டி பகுதியில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், எழுத்தாளர் மற்றும் பிரதிநிதிகள், நிறுவனத்தில் பணிபுரியும் சரஸ்வதி, ராதா, சுமதி, சுருதி ரிசோர்ஸ் சென்டரின் செயற்குழு உறுப்பினர்களாகிய லட்சுமி, எல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் செயற்குழு உறுப்பினர்கள் நன்றி கூறினர்.

    Next Story
    ×