search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி சமூக சேவை சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
    X

    தருமபுரி சமூக சேவை சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

    • சர்வதேச மகளிர் தின விழா கிறிஸ்துபாளையம் ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • இந்த விழா ஆயர் லாரன்ஸ் பயஸ், தலைமையில் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி சமூக சேவை சங்கம், காரிதாஸ் இந்தியா, கோல்பிங் இந்தியா, தமிழக சமூகப்பணி மையம், தமிழக பெண்கள் கூட்டமைப்பு, கிறிஸ்துபாளையம், ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம், மூவேந்தர் கலைக்குழு இணைந்து, சர்வதேச மகளிர் தின விழா கிறிஸ்துபாளையம் ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழா ஆயர் லாரன்ஸ் பயஸ், தலைமையில் நடந்தது. மதர் ஆஞ்சலா, தாளாளர் ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர், முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களை தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் ஜேசுதாஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    விழாவில் திருச்சி தமிழக சமூகப்பணி மைய இயக்குநர் ஆல்பர்ட் தம்பிதுரை, ஆனி ஜாய்ஸ், லூர்துசாமி, ஸ்டீபன் சொரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு முன்னதாக மதர் ஆஞ்சலா பச்சை வண்ண கொடியை அசைத்து புற்றுநோய் மற்றும் இதயம் காப்போம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    ஜேசுதாஸ் விழிப்புணர்வு சார்பான முழக்கங்கள் எழுப்பி பேரணியை வழிநடத்தி சென்றார்.

    இவ்விழிப்புணர்வு பேரணியில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.

    விழாவில் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், மாவட்ட கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், மூவேந்தர் கலைக்குழு மற்றும் ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் ஜேசுதாஸ், ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், லூர்துசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×